திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Wednesday, September 3, 2008

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர்





அற்புத கீர்த்தி வேண்டின்



ஆனந்த வாழ்க்கை வேண்டின்



நற்பொருள் குவிதல் வேண்டின்



நலமெல்லாம் பெருக வேண்டின்



கற்பக மூர்த்தி தெய்வக்



களஞ்சியத் திருக்கை சென்று



பொற்பதம் பணிந்து பாரீர்



பொய்யில்லை கண்ட உண்மை.

கவிஞர் கண்ணதாசன்




ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க! ஆறுமுகப்பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க! ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்களத்தைத் தந்தருள்க!



ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், நான்கு தோள்களும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக விநாயக மூர்த்தியை நான் தொடங்கும் சகல காரியங்களும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக வணங்குகிறேன்.





மங்கள முகம் வாய்ந்த ஸுமுகன்




ஒற்றைக்கொம்பையுடைய ஏகதந்தன்



கபில நிறம் வாய்ந்த கபிலன்



யாணைக் காதுகள் உள்ள கஜகர்ணன்



பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்



குள்ளத்தோற்றமுள்ள விகடர்



சகல விகனங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்



துஷ்டச் செயல்களையும் இடையூறுகளையும் நீக்குவதில் வல்லவரான விநாயகன்.



நெருப்பைப் போல ஒளி வீசித் திகழ்பவரான தூமகேது.



பூதகணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷன்



நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவரான பாலச்சந்திரன்



யாணை முகத்தியுடைய கஜானனன்.



வளைந்த துதிக்கரமுள்ள வக்ரதுண்டன்



முறம் போல அகலமான காதுகள் உள்ள சூர்ப்பகர்ணன்.



தம்மை வணங்கி நிற்கும் பக்த கோடிகளுக்கு அருள் பொழியும் ஹேரம்பன்.



கந்தபெருமானின் தமைனாயரான ஸ்கந்த பூர்வஜன்.



இவ்வாறு சொல்லப்படும் விநாயகப்பெருமானின் பதினாறு திருநாமங்களையும், வித்தைகளைக் கற்கத் தொடங்கும் போதும், வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போதும், போர்க்காலத்திலும், இன்னல்கள் வந்த போதும், யாராவது வாசித்தாலும், அல்லது செவி குளிரக் கேட்டாலும் அவர்களுக்கு எந்த வித விக்கினங்களுமே சம்பவிக்காது.





அன்பர்கள் அனைவருக்கு இனிய "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள். அந்த விக்னவிநாய்கர் தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் நல் அருளை வழங்குமாறு பிரார்த்திக்கின்றேன்.



****************



சி. அ : சூப்பர்ப்பா! விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒரு நல்ல பதிவு போட சான்ஸ் கெடச்சதுக்கு.



பெ. அ: விநாயகரைப் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்.



விநாயகப் பெருமானும் ஒரு எழுத்தாளர் தான்னு நெறையப் பேருக்கு தெரிஞ்சுக்காது.



சி. அ: ஆஹா, அப்படியா, எந்த கதைப்பா எழுதுனாரு அவரு.



பெ. அ : இது கூடவா தெரியல்ல?



சி.அ : (ஆமாம்மான்னுடு சிரிக்கறா) , ஏமாந்திட்டயா, நல்லாவே தெரியும் அவரு மஹா பாரதத்தை எழுதினாருன்னு.



ஆமா, வியாச மஹரிஷி கூறிய பாரதத்தை, அவர் கூறிய வேகத்திற்கு எழுத யாராலும் முடியவில்லையாதலால் கணபதி தானே வந்து எழுதியருளினார்.



சி. அ: அம்மா நீங்க சொல்லுங்க , விநாயகர் எதால மஹாபாரதத்தை எழுதினாரு.



பெ. அ: பெரிய கேள்வி கேட்டுட்ட போ?



சி. அ: அதெல்லாம் முடியாது பதில் சொல்லுங்க.



பெ. அ : கஜாமுகாசூரனைக் கொன்ன தன்னோட ஒத்தை கொம்பாலதான் அவ்வளவு ஸ்பீடா எழுதுனாறு அது கூடவா எனக்குத்தெரியாது.



சரி ரெண்டு பேருமே புத்திசாலிகதான். இன்னைக்கு யாரைப்பத்தி சொல்லப்போறேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.



ரெ. பே: எங்களுக்கு தெரியாதா, உங்களுக்கு புடிச்ச யாராவது ஒரு ஆன்மிகப் பதிவரத்தான்.



இல்லையே, இன்னிக்கு ஆண்டவன் புகழ் பாடும் பதிவுகளைப் பத்தி சொல்லப்போறேனே.



சி. அ : அப்படியும் பதிவுகள் இருக்குதாப்பா ?.



ஆமாம்மா நெறைய இருக்கு, பல்வேறு அன்பர்கள் ஒண்ணா சேர்ந்து இது மாதிரிக் குழுப்பதிவுகள் எழுதுறாங்க.



பெ. அ: அதுல்ல எதை முதல்ல சொல்லப்போறீங்க. கண்ணன் பாடல் பதிவைப்பத்தித்தான்.



இந்த அன்பர்கள்தான் கண்ணன் பாட்டு பாடறவங்க

மடல்காரன்

ஷைலஜா


மலைநாடான்


தி. ரா. ச.(T.R.C.)


கவிநயா


குமரன் (Kumaran)


dubukudisciple Raghav


இவங்க எல்லாரும் சேர்ந்து படைக்கிற விருந்துதான் கண்ணன் பாட்டு. நூறாவது பதிவில் கன்னட பாடல் "கிருஷ்ணா நீ பேகனே வாரோ" பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு, பாடல் ஒரு அன்பர் பாடறவங்க ஒருவர், தனி முத்திரை அப்படின்னு கலக்கிட்டாங்க.

சி. அ: நெஜமா எல்லாரும் போய் பாக்க வேணுங்கற வலைப்பூவுன்னு சொல்லறீங்களா அப்பா?

நிச்சயமா, அதுல என்ன சந்தேகம்.

சி . அ: நூத்துக்கு மேல பதிவுகள் இருக்கறதுனால இதை முதல்ல சொன்னீங்க இல்ல அப்பா.

ஆமாம்மா முதல் முதல்ல ஆரம்பச்சதினாலயும் சொன்னேன்மா.


பெ . அ : அப்ப அடுத்து முருகனருள் பதிவைப்பத்திதான சொல்லபோறீங்க.

கரெக்ட்டா யூகிச்சிட்டியே

சி அ: உங்க பேரு அதுல வருதே அதனால தான அப்பா

விளையாடதம்மா அடுத்ததா நூறாவது பதிவைத் தொடப்போறாங்கறதால முருகனருளை ரெண்டாவதா சொல்றேம்மா.

பெ. அ: யார் யாருங்க இதுல காவடி சிந்து பாடறாங்க?


குமரன் (Kumaran)

VSK

நாமக்கல் சிபி

SP.VR. SUBBIAH

G.Ragavan

தி. ரா. ச.(T.R.C.)

இவங்கதாம்மா அந்த முருக பக்தர்கள்.

சி. அ : திருமாலையும் அவரது மருகரான வேலனையும் பாடறவங்களைப் பத்தி சொல்லியாச்சு அடுத்து யாருப்பா?

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை ப்பாடறவங்களைப் பத்தி சொல்லலாம்மா?

பெ. அ: சரி, அம்பாளைப்பத்துன பாடல்கள் உள்ள வலைப்பூ கற்பூர நாயகியே கனகவல்லி தானேங்க?

ஆமா, அதுல அம்மன் புகழ் பாடுறவங்க

கவிநயா

குமரன் (Kumaran)

VSK

அன்புத்தோழி

சி. அ: இப்பதிவுல எனக்கு கவிநயா ஆன்டியோட கவிதைகள் நல்லா புடிக்கும்.

பெ. அ : எனக்கும் தான்.



அடுத்தது சிவன் பாட்டைப்பத்தி சொல்லலாமா? அன்பே உருவான கயிலை நாதரின் பாட்டுகளைக்கொண்ட இவ்வலைப்பூ இப்பத்தான் ஆரம்பிச்சாங்க.

சி.அ : வலைப்பூவோட பேரு சிவன் பாட்டு

நமச்சிவாயருக்கு மங்களம் பாடறவங்க

சிவன் பாட்டுல KRS ஐயா தேவாரம், திருவாசகம் எல்லாத்துக்கும் அருமையான விளக்கங்கள், அதை விட அருமையான படங்கள்ன்னு கலக்குறாங்க.
பெ அ: மனசுக்குள் ( ஆமா, எம் புருஷனும் கச்சேரிக்கு போறேன்னுட்டு, ஒத்தப் பதிவைப் போட்டுட்டு, ஜாலியா உக்காந்து வலைச்சரத்துல எழுதிகிட்டு இருக்கிறீங்க)
*********


சன்மத காவலர் KRS ஐயாவுக்கும் மற்ற அன்பர்களுக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஒரு விண்ணப்பம், ஐயா ஆதி சங்கரர் ஸ்தாபித்த சன்மதங்களில் நான்குக்கு வலைப்பூ இருக்கு. விநாயகருக்கு இன்றைக்கு ஆரம்பியுங்களேன். அடியேனும் கலந்துக்கறேன்.
வித்தக விநாயக விரைகழல் சரணே.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home