திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Saturday, September 13, 2008

மீண்டும் சந்திப்போம் அன்பர்களே


பொன்னிறத்தில் எம்பெருமான்



ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.)







இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம்




(படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)



நம்மூர்ல எல்லாவற்றையும் மங்களகரமா சொல்ல வேண்டுமென்பதற்காக இவ்வாறு கூறுமாறு அமைத்துள்ளனர், எனவே கவலைப்பட வேண்டாம் மீண்டும் வந்து தொல்லை தருவேனோ என்று. ஆயினும் வலைச்சர்ம் மூலமாக இல்லாவிட்டாலும் அடியேனது வலைப்பூக்கள் மூலம் சந்தித்துக் கொள்ளலாம்.



இந்த ரெண்டு வாரமா அடியேன் பெரிய அம்மிணியோடயும், சின்ன அம்மிணியோடயும் கிறுக்குன கிறுக்கலகளை வந்து படிச்ச்வங்க எல்லாருக்கும் பெரிய கும்பிடுங்கோ.

ரொம்ப நல்லா போச்சுதுங்க ரெண்டு வாரம், KRS சார் வந்து நெறைய பட்டம் கொடுத்தாருங்க. துளசி டீச்சர் வந்து ஐடியா கொடுத்தாங்க, யாரைப் பத்தி எழுதனனோ அநேகமா எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க.



ரொம்பப் பேரு வந்து கயிலை நாதரை தரிசிச்சாங்க, அருமையான தரிசனம் கெடச்சுத்துன்னும் சொன்னாங்க அதுக்காக சந்தோஷங்க. ஒரு வருஷமா 70 பதிவுகள்ல முடியாதது இரண்டு வாரத்துல 20 பதிவுகள்ல கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷங்க.




திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.




எப்படியோ 25 பதிவுகள் எழுதிட்டேன், சீனா ஐயா கொடுத்த எல்லா வேலைகளையும் முடிச்சாச்சுன்னு ஒரு திருப்தி.




இன்னும் நெறையப்பேரைப் பத்தி எழுத நெனைச்சிருந்தேன், குறிப்பு கூட எடுத்து வெச்சிருந்தேன், இரண்டு வாரமா எழுதியும், கிடச்ச நேரத்துல இவ்வளவுதான் முடிஞ்சது அதனால் தான் பல பதிவுகள்ல உங்களோட அறிமுக சுட்டி மட்டும் குடுத்திருக்கேன். ஏதாவது குறை இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ.






எவ்வளவோ புதுப் புது வலைப்பூக்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அடியேனுக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கும், வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் நன்றி, இவர்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.





உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.



நன்றி வணக்கம்.
------------------------------------------

Labels:

வெட்டிப்பய புள்ளைக சங்கம்

இந்தக் காலத்துல எல்லாம்மே தலை கீழா மாறிப்போச்சுங்க, காலம் கெட்டுப்போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களோ. எங்க காலத்துல வெட்டிப்பசங்கன்ன ஒரு "தனி மரியாதை" இருந்துங்க அதை இவங்க கெடுத்துட்டாங்க.

வெட்டி பய புள்ளைக சங்கம்!!!

இதுல இவங்க ரெம்ப உருப்படியா நேரம் செலவழிச்சு எழுதறதைப் படிக்கப்போனா,







ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு!!! ன்னு சொல்லறாங்க.

இப்படி உருப்படியான வேலை செய்யறவங்க

சுட்டிப்பய புள்ள

ஆல் இன் ஆல் அழகுராஜா

பேரின்ப பேச்சுக்காரன்

பாசக்கார பயபுள்ள...

Pulipandi

கொருக்குபேட்டை கஜா

இருக்குங்க கடையா ஒரு missile ( ஆப்பூ)

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...

இதைப்படிச்சுட்டு என்னால சிரிக்காம இருக்க முடியல்ல ரொம்ப டமாஸ்தான் போங்க. நேரம் கெடைக்கறப்ப நீங்களும் போங்க.




------------------------------------




இன்றைய தினம் மேக மூட்டத்தின் நடுவில் எம்பெருமான் எப்படி காட்சி தருகின்றார் என்பதைப் தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே.

எம்பெருமானுக்கு எதிரில் நந்தி எப்படி தன் மூச்சுக்காற்றால் பொன் மயமான ஊஞ்சலில் கமனீயமாக ஆடும் பவள நிற எம்பிரானையும், பச்சை பசுங்கொடி பர்வத ராஜ குமாரியையும் குளிவிக்கிறார் என்பதை காணுகின்றீர்கள்.



( ஐயனுக்கு எதிரே உள்ள சிறிய மலைதான் நந்தியெம்பெருமான்)


கருணா மூர்த்தி எம்பிரானின் ஜடாமுடி, தேவலோகத்திலிருந்து கங்கை பூலோகத்திற்க்கு ஐயனின் ஜடாமுடியின் வழியாகத்தானே இறங்கினாள்.






ஐயனின் ச்த்யோஜாத முகம் மேக மூட்டத்தில்.




மானசரோவர் தடாகம்






இராக்ஷஸ் தால் ஏரி

இளம் மொக்குகள்

சி.அ : இன்னா நைனா, காலங்கார்த்தால குந்திகினூ இன்னா ரோசனைல கீறீப்பா?

அது ஒன்னுமில்ல்ம்மே , ஏதோ ஒன்னு இடிக்குதும்மே அதாங் இன்னான்னு ரோசிச்சிகீனு கீறேன்.

பெ.அ : அட கஸ்மாலம், இதுக்கு என்னா ரோசனை, ஒரு தபா எழுதுனது எல்லாத்தயும் திருப்பிப்ப் பாரு, இன்னா விட்டு போச்சுன்னு அம்புட்டுடிம்.

கரீக்டா சொன்னேம்மே இப்பவே ஒரு தபா பாத்துட்றேன்.

சி.அ: இன்னா சிக்குச்சா.

ஆங் மாட்டிகிச்சு, புச்சா பதிவு எழுதவறங்லை சொல்லிக்க்லையே.

பெ அ. அதுக்கிண்ணா, இப்போ சொல்லிப்போடு

இத இபபால எழுதறேன், ரொம்ப டேங்ஸ்ம்மே.

பெ அ: சீக்கரம் எழுதுபா இல்லாட்ட டைம் முடிஞ்சு போகும் நாளைல இருந்து வேற மனுஷன் எழுதனுமில்ல.

அகாங் இப்பவே எழுதி கடாசிர்ரேங்.

(பிறந்தது,வளர்ந்தது பள்ளியில் படித்தது எல்லாம் உடுமலைப்பேட்டையில், மேற்படிப்புக்காக கிண்டி வந்த பின். இந்தியா முழுக்க சுற்றினாலும் வாசம் சென்னையிலே அதிகம், ஆயினும் சென்னை செந்தமிழ்( மெட்ராஸ் பாஷை) சரியாக வரவில்லை. ஆகவே இப்பதிவில் சிறு முயற்சி செய்துள்ளேன், ஆயினும் சரியாக் வராததால் பாதியில் விட்டு விடுகிறேன்.)

----------------------------------------------------------
வலைச்சரத்தில் புது அன்பர்களையும் அறிமுகம் செய்ய்யும் ஒரு வழக்கம் உள்ளது . ஆகவே இப்பதிவு அப்படிப்பட்ட புது பதிவர்களுக்காக.

ஆனால் முதல் அன்பர் அடியேன், கீதாம்மா போல திருக்கயிலாய தரிசனம் பெற்றவர். திருக்கயிலாய யாத்திரை பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார், இது வரை எழுதிய பதிவுகளில் இவர் இடம் பெறவில்லை என்பதால் இவர் இப்பதிவில் இடம் பெறுகிறார்.

திருக்கயிலை நாத்னை தரிசன்ம் செய்யும் பேறு பெற்ற இன்னொரு அன்பர் சிங்கை கிருஷ்ணன்

இவரது வலைப்பூ சிங்கை கிருஷ்ணன் ப்திவுகள்

இவர் தன்னை பற்றி கூறும் அறிமுகம்:

தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகத் தேடலில் இன்புறுகிறேன். அம்மையப்பன் அருளால் மூன்று நூல்கள் எழுதியிருக்கிறேன். அருளாட்சி அழைக்கிறது, கண்டேன் கயிலையை, மற்றும் சிங்கப்பூர் கோவில்கள் என்பன அம்மூன்று நூல்கள்.

எனது பிற தளங்கள்:

சைவம்

சிங்கைக் கோவில்கள்

தற்போது பொருணை நதிக்கரை கோவிலகள் பற்றியும் பதிவிடுகிறார். வளர்க சிங்கை கிருஷ்ணன் ஐயாவின் தொண்டு.
--------------------------------

இனி சில புதுப்பதிவர்கள் பற்றிய அறிமுகம்

ரங்க மீனா மலேசியாவில் வசிப்பவர். மிகவும் அருமையாக ஆத்திச்சூடிக்கதைகளை பதிவிடுகிறார்.


ஆத்திசூடி நீதிக்கதைகள். இவர் ஏன் ஔவையின் கதைகளை பற்றி எழுதுகின்றார் அவரே இவ்வாறு கூறுகின்றார்.

"இங்கு சொல்லப் போகும் 108 ஆத்திசூடிக்கான நீதிக்கதைகள் யாவும் அந்தக்கால கதைகள்!.இக்கதைகள் பெரும்பாலும் நாம் அறிந்ததுதான் என்றாலும் அறியாதவரும் இருப்பார்கள். இதில் வரும் பல கதைகள் இந்தக்கால கட்டத்திற்கு பொருந்தாமலும் இருக்கக்கூடும் அப்படி இருக்குமெனில் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்."

இவரது இன்னொரு வலை மொக்கு தாலாட்டு கூட்டுக்குடும்பங்கள் மறைந்து,கணவன் , மனைவி இருவரும் வேலைக்கு ஒடுவதால் மறைந்து வரும் தாலாட்டுப்பாடல்கள், அடுத்த தலைமுறைக்கு மறந்து போகாமல் இருக்க மல்ரும் நினைவுகளாய் தாலாட்டுப்படல்களை பதிவிடுகிறார்.

நன்றி மற்றும் வாழ்த்துக்க்கள் ரங்க மீனாம்மா.

-----------------------------

இவர் தற்பொது இங்கிலாந்தில் வசிக்கும் புது வண்டு. லண்டனில் வசிப்பதால் வலைப்பூவிற்கு Newbee என்று பெயரிட்டுள்ளார், ஆனால் URL - naanpudhuvandu என்று கொடுத்திருக்கிறார். பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் விட்டுத்தராதது அருமையோ அருமை.

NewBee ஒரு வண்டின் ரீங்காரம், குழந்தைகளுக்கன படக்கதை, கதை என்று அருமையாக மிளிர்கிறது. தன் மகனுக்காக எழுதியதை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் என்று பதிவிடும் அன்பு உள்ளம் கொண்டவர்.

இவர் தன்னைப்பற்றி இப்படி சொல்லுகின்றார்.

வருகைக்கு நன்றி! உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு? ஏன் இந்தப்பதிவு? வண்டு! உங்களைப் போல் ஒன்று. ஆம்! உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு?' என்று. :) :)


குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்' படிக்க கிளிக்குங்கள் இங்கே.

இவர் வலைச்சரத்தில் கற்ற புதுமொழியை ( விக்கி பாஷை) என்று அழைக்கலாமா? இப்படி பட்டியலிடுகிறார். புதிதாக வலையில் நுழையும் அன்பர்களுக்கு ஒரு அருமையான Dictionery இது.

1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ;


2. பதிவு, இடுகை = Post ;


3. சுட்டி = Pointer, Link ;


4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ;



5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ;


6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ;


7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-));


8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...! அல்லது ஐயோ! = Oops! (நன்றி- An&);


9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்);


10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;


11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ;


12. சிறப்பாக அமையட்டும் = All the Best ;


13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)

மற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....) என்று கூறும் புது வண்டிற்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

( இரங்கமணி, தங்கமணி, கும்மி, மொக்கை, கவுஜை இதற்கெல்லாம் எனக்கும் விளக்கம் தெரியவில்லை யாராவது உதவுவீர்களா? அன்பர்களே) ------
-------------------------------------

அடுத்தப் புதுப்பதிவர் கடையம் ஆனந்த் அவர்கள்.

என்னுடன் நீங்களும், உங்களுடன் நானும்... பிடித்திருந்தால் பழகுவோம் (இது கடையத்து தென்றலின் அன்பு அழைப்பு) என்று ஆரம்பிக்கும் ஒரு பிள்ளையார் பக்தர். மார்ச் 2008ல் வலைப்பூவை துவங்கியவர் இது வரை 55 பதிவுகள் இட்டுள்ளார்.

மனம் இவரது வலைப்பூ.பல்வேறு தலைப்புக்ளிலும் எழுதி மலரத்தொடங்கியுள்ளார். தனக்கு பிடித்தது ஆன்மிகம் என்று சொல்லும் ஒரு இனிய அன்பர் இவர் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Labels:

Friday, September 12, 2008

குட்டீஸ் கார்னர்

ஹாய் அங்கிள், ரண்டு வாரமா, எல்லா பெரியவங்க வலைப்பூவைப்பத்தியும் எழுதீட்து வரிங்க்க், ஆன்னா எங்களைப்பத்தி எதுவும் சொல்லலையேன்னு ஒரு குரல் கேட்டுச்சு யாருடான்னு பார்த்தா ஒரு குட்டி பாப்பா.


( இது கற்பனை இல்லீங்க உண்மைங்க, இந்த பாப்பாதாங்க வலைச்சரத்தின் முதல் Follower)


ஏ! குட்டிப் பாப்பா நீயும் வலைப்பூ எழுதறயான்னு கேக்க, ஆமா அங்கிள் அதனால்ல எங்களைப்பத்தியும் எழுதுங்கன்னு சொன்னா உன்னோட பேரு என்னம்மான்னு கேட்க நிலான்னு சொல்ல;



என்னம்மா செய்யறேன்னு நான் கேட்க , குட்டி பாப்பாக்கு என்ன வேலை இருக்கும்? மம்மு குடிக்க, ஆப்பு சாப்பிட, மூச்சா போக, கோபம் வந்தா அழுக, ரொம்ப கோபம்னா கிடைச்ச இடத்துல நருக்னு கடிச்சு வைக்க, இப்போதைக்கு இதான் செய்யறேன்னு ன்னு சூப்பரா சொல்லுது . அப்பறம் அந்தப் பாப்பாவைப்பத்தி எப்படீங்க எழுதாம இருக்க முடியும்.

அந்த பாப்பாவோட விருப்பத்துக்காக இந்தப்பதிவு. அந்த பாப்பாவோட போட்டோக்களைப் பாக்க கிளிக்குங்க நிலா பாப்பா

சரின்னு சொல்லி அந்த பாப்பா சொன்ன வலைப்பூவில போய் பாத்தாதாங்க தெரியுது அந்த பாப்பா மட்டும் இல்லீங்க இனியும் நெறைய பாப்பாக்கள் சேந்து .குட்டீஸ் கார்னர் . :: ல லூட்டி அடிக்கறாங்கண்ணு அந்த மத்த் பாப்பாக்க




SanJai





இளமதி





அம்மு





பானுதேஜு





Shridhu





.:: மை ஃபிரண்ட் ::





ஆஷ் அம்ருதா





Baby Pavan





இவங்க தாங்க சின்ன வயசுலேயே கலக்கறவங்க. ( இதுல யாராவது பெரியவங்க இருந்தா அது என்னோட தப்பு இல்லீங்க)




நிலாக்குட்டி போட்டோக்களை பார்க்க இங்கே போங்க. அதுல இருக்கற அந்த பாப்பா அனிமேஷன் சூப்பரு.



baby pavan போட்டோஸ் பார்க்க இங்கே போங்க .பேபி பவன்



இவ்வாறு வித்தியாசமாகவும் யோசித்து வலைப்பூக்களை உருவாக்கி பதிவு செய்து கொண்டு வரும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

----------------------------------------------------
இன்றைய தினம் யாத்திரை செல்லும் வழியில் அடியோங்கள் இரசித்த பனி மூடிய மலைச்சிகரங்கள் சிலவற்றை கண்டு களியுங்கள் அன்பர்களே.




Sangrur Peaks on the Nepal side view from Gunji

சாங்ரூர் சிகரம் -கூஞ்சியிலிருந்து.




Nilkant Peak on the Nepal side


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்







Nag Parvat along with Nagini- Kalapani (resembles snake raising its hood)


படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்





Nabhi Peak -Nabhidang(resembles naval of human body)


மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.


These three peaks also form the juncton of three international borders of India, Nepal and China.


திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.



Naturally formed cosmic symbol OM- a wonder of Nature -OM PARVAT -Nabhidang


இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்




Trishul Peak( Resembles Trident , supposed to be Shiva, Parvati and Ganesh)-Nabhidang


திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்






Gurla Mandata peaks in China


இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.




Chiyalekh Pass -gateway to valley of flowers.


பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்




Indian mountain view from Lipulekh pass


லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி






Annapurna Peaks


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.





Adi Kailash or Chotta Kailash - on way to Gunji ( exactly resembles Holy Kailash)


ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.


இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.



Labels:

PIT போட்டியும் தேன் கிண்ணமும்


தமிழ் வலையுலக் அன்பர்களை கையில் புகைப்படக்கருவியுடன் அலைய வைக்கும் ஒரு பிரபலமான வலைப்பூ இது. பெய்ர் என்னவோ தமிழில் இல்லை என்றாலும் கருத்து தமிழ் வலைப்பதிவர்களை நல்ல புகைப்பட கலைஞர்கள் ஆக்குவதுதான். PIT போட்டிக்கு புகைப்படம் அனுப்பாத தமிழ் வலை அன்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

ஒரு சமயம் அடியேன் கூட் ஒரு பதிவிட நினைத்தேன் " தமிழர்களை மென்ட்டலாக்கும் ஃபிட் போட்டி " என்று. நல்ல வேளை எழுதவில்லை எழுதியிருந்தால் இப்படி இருந்திருக்கும். சென்ற வாரம் நான் டேராடுன் போயிருந்தேன் அப்போது அங்கிருந்த ஒரு பார்க்குக்கு ஜாலியாக போயிருந்த போது ஒரு ஆளு நம்ம ஆளு மாதிரி தெரிஞ்சாரு கேமாரவை மாட்டிகிட்டு ஒவ்வொரு பூவா வித விதமா போட்டோ எடுத்துகிட்டு இருந்தாரு, மெல்ல என்னங்க தமிழான்னு கேட்டா, ஆமாங்க எப்படி கண்டு பிடிச்சீங்கன்னு கேட்டாரு, நான் அதுக்கு அது தான் மூஞ்சியிலே எழுதி ஒட்டியிருக்கேன்னு சொல்லிட்டு என்ன பண்ணீடடு இருக்கீங்கன்னு கேட்க PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கிறேன்னு சொன்னருங்க.




ஒரு வாரம் கழிச்சி மெட்ராஸ் வந்து ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டிருந்த பொது ஒருத்தரு வட்டமா எதைப் பார்த்தாலும் அதை முறைச்சு முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார், ரோட்ட்டுல ஓடற பஸ் கார்ரோட சக்கரம், ரோட்டுல நடுவுல இருக்கற சாக்கடை மூடி அப்படி எதாவது வட்டமா இருந்தாலும் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க . அவங்களை கேட்டா PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கேன்னு சொல்லறாங்க,
இப்பிடி தமிழ் மக்களை மென்டலாக்கி , புகைப்பட கலைஞனாக்க முயற்சிக்கும் photography-in-tamil வலைப்பூவை உருவாக்கி நடத்திக் கொண்டு வரும்










ஆகியோருக்கு நன்றீங்க



இதுல jeeves சார் தேன் கிண்ணங்கற வலைப்பூவுலயும் பங்களிக்கறாரு.
சினிமாப்பாடலுக்கான வலைப்பூ. நீங்கள் சினிமாப்பாடல்களை படிக்கலாம், பார்க்கலாம் , கேட்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு பாடகர் வார நட்சத்திரமாக நியமித்து அவரோட பாடல்க்ளை பதிவு செய்யறாங்க. இதன் பங்களிப்பார்கள்












( இவர் முருகனுருள் வலைப்பூவிலேயும் பங்கேத்துகறாங்க)












































நிச்சயமாக அன்பர்கள் அனைவரும் ஒரு தடவையாவது இவ்வலைப்பூ பக்கம் போயிருப்பீங்க. இல்லாட்டி உடனே போய் பாருங்க ஏமாற்றம் அடைய மாட்டேங்க ஏன்னா சினிமாப்பாட்டுக்களை முணுமுணுக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.
------------------------------------

இன்றைய தினம் திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்த

கௌரி-சங்கர் தரிசனம் காணுங்கள் அன்பர்களே.



இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்





The first darshan of Kailash during the yatra is from Rakshas Tal only enjoy that view .


திருக்கயிலாய யாத்திரையின் போது கயிலயங்கிரியின் முதல் தரிசனம் இராவணன் உருவாக்கிய இந்த இராக்ஷஸ்தாலிலிருந்து தான் கிடைக்கிறது அந்த அழகை இரசியுங்கள்.



Enjoy the beauty of the Lord and Mother with Manasarovar -


This view is known as Gowri Shankar



நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!























We will continue with the view of Kailash from Manasarovar and Rakshastal.

இனி கௌரி சங்கர் என்று அழைக்கப்படும் கைலாயம் மற்றும் மானசரோவர் இரண்டும் இனைந்த தரிசனம்









Labels:

சில உபயோகமான வலைப்பூக்கள்


இப்பதிவில் எல்லோருக்கும் பயனளிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி காண்போம்.




முதலாவது சூடான செய்திகளுக்கு நீங்கள் ஓட வேண்டிய வலைப்பூ சற்றுமுன்...

இவ்வளவு மெனக்கெட்டு மத்தவங்களுக்காக தங்கள் நேரத்தை செலவு செய்து செய்திகளைப் படித்து தருபவர்கள்
மணியன்




















































பெருசு
----------------------------------
இந்த விக்கி(wiki) யுகத்தில் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக " தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ!" என்பதை குறிக்கோளாக வைத்து செயல்படும் வலைப்பபதிவர்கள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தா கீழே படிங்க.

வலைப் பூ : விக்கி பசங்க

உங்களுக்கு வேணுங்கற தகவல்களை தர்றவங்க





































இப்பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள கேள்விக்குறியினைச் சுட்டி, அதிலுள்ள பதிவில் விக்கிப்பசங்களுக்கான உங்கள் கேள்விகளைக் கேட்கலாம், கேட்டு சந்தேகத்தை தீர்த்துகிட்டு எல்லோருக்கும் சொல்லுங்க.
-------------------------------------------
இப்பொழுது எல்லாருமே ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ முடிவதில்லை எனவே இவங்கல்லாம் சேர்ந்து


பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன்.
















வாஞ்சிநாதன்

தர்ற இயன்ற வரையிலும் இனிய தமிழில்... வலைப்பூக்குப் போனா இனிய தமிழ கற்கலாம்.



------------------------







காசேதான் கடவுளடா என்று எண்ணும் அன்பர்களுக்கு பங்கு மார்கட்டில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்று கூறும் வலைப்பூ.






இதன் ஆசிரியர் சரவணக்குமார்.






மூன்று இலட்சம் பார்வைகளைத் தொடப்போகின்றது இவ்வலைப்பூ.






தெளிவான திட்டமிடுதல், நேர்த்தியான அணுகுமுறை, தொடர்ச்சியான ஆர்வம், தளராத மன நம்பிக்கை இதனோடு கொஞ்சம் பணமிருந்தால் போதும் சாதித்து விடலாம் என்று அழைக்கின்றார் இவர்.






பங்கு மார்க்ட்டில் பணம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற வலைப்பூ.






600 வது பதிவை எழுதிவிட்டு பங்கு வணிகம் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்.



இந்த பதிவின் வெற்றி நிச்சயமாய் என்னுடையது அல்ல….இத்தனை நாள் தொடர்ந்து எழுதியதும் என்னுடைய சாதனை இல்லை…இவை அனைத்துமே உங்களால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. நீங்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமுமே இந்த அறுநூறாவது பதிவு….இது வெற்றி அல்லது சாதனையாக கருதப்படும் பட்சத்தில்….அதனை…அதன் காரண கர்த்தாவாகிய உங்களுக்கே சமர்ப்பிக்க்றேன்.





-------------------------------------------------


இன்றைய தினம் ஜூன் மாதத்தில் ( பனி முழுவதுமாக உருகாத காலத்தில்) திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட ஒரு அன்பர் தனது தரிசன காட்சிகளை கொடுத்து அருளினார் அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.


சிவசக்தியின் திருவடி நீழலில் உறங்கும் அனபர்கள்




இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து ஐயனின் தரிசனம்




மானசரோவரத்தில் அற்புத ஆனந்த தீர்த்தமாடல்


பின் புறம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்




ஆலமுண்ட நீலகண்டரின் தெற்கு முகம் ( முக்கண்கள், கங்கை இறங்கிய ஜடாமுடி, இராவணன் வடக்க்யிற்றின் வடு அகியவற்றை இம்முகத்தில் காணலாம்)





இந்துக்களாகிய நாம் நடந்து கயிலாய கிரிவலம் வருவோம் இது பரிக்ரமா என்று அழைக்க்ப்படும் 52 கி. மீ கிரி வலத்தை நாம் மூன்று நாட்களில் முடிக்கிறோம்.


ஆனால் திபெத்தியர்கள் அடி விழுந்து கும்பிட்டு கிரி வலம் வருகின்றனர். இவ்வாறு பனியிலும் கோரா செய்யும் இரு திபெத்தியப் பெண்களை படத்தில் காணலாம் , இவர்கள் ஒரு தடவை கோராவை முடிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னே இவர்கள் பக்தி.




ஆனந்த வாமதேவ மூர்த்தி

Labels:

என்ற ஊர்க்காரங்க

என்னங்க இது என்றன்னு பார்க்கறேங்களா, கொங்கு பாஷையில என்னுடையதுன்னு அர்த்தமுங்க. என்னடா ஒட்டிக்கறான்னு பார்க்கறீங்களா. பொறந்த மண்ணு பாசந்தாங்க.



முதல்ல சொல்ல வேண்டியவரு பரிசல்காரன் அண்ணணுங்கோ, இவரும் உடலப்பேட்டக்காரருங்க ( உடுமலைப்பேட்டை) அதாவ்து உடும்பு மலை பேட்டைகாரருங்கோ. ஒரு காலத்துல எங்க திருமூர்த்தி மலைல உடும்புக நெறைய இருந்ததா கேள்வி பட்டிறுக்கோங்க ஆனா இப்பெல்லாம் கண்ணுல படறதே இல்லீங்க.




இப்ப அண்ணன் திலுப்பூருல வேலை செய்யறாங்க இவரோட வலைப்பூ பரிசல்காரன்






ரசிப்போர்கள் விழி தேடி... பதிவுகள் எழுதறாருங்க.



நம்மளப் பத்தி சொல்லோணும்னா..



நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன்! (ஏதாவது புரிஞ்சுதா?) அப்படீங்கறாருங்கோ.




அவரைப் பத்தி என்ன சொல்லறதுக்கு இருக்குங்க, அதான் மூன்றரை லெச்சம் தடவை இவர் படிக்கப்ட்டிருக்காங்க்றது ஒன்னு போதாதுங்களா? ஆனாலும் ஒண்ணு ரெண்டு சொல்லறேங்க.






இப்பத்தான் நூறாவது பதிவை போட்டிருக்காங்க. கஷ்டப்படறவங்கள பரிசலாக இருந்து கரை சேர்க்க பாடுபடுகிறார். K. B. கிருஷ்ணக்குமார் அண்ணன்.




கோவிலுக்கு வெளியிலேயும் தெய்வமுண்டு அதை குழந்தையும் எனச்சொல்வதுண்டு அப்படீன்னு குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுன்னு சொல்லற அண்ணன் வாழ்க.




----------------------------------------


அடுத்தவங்க சின்ன அம்மிணிங்க, நம்ம சின்ன அம்மிணி இல்லீங்க இவங்க கோயம்புத்தூர்காரங்க ஆனா இப்ப வசிப்பது நியூசிலாந்தில்ங்க. அதனால கிழக்கால இருக்கறதால காலையிலே நேரத்துலயே பின்னூட்டம் போட்டுறறாங்க.






நம்ம கொங்குப்பேரையே தன்னோட பேரா வெச்சுகிட்டு இருக்காங்க அம்மிணி.



பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர் ன்னுட்டு அம்மாவைபப்த்தி அருமையா எழுதற இவங்க எழுத்தைப்படிக்க கிளிக்குங்க சின்ன அம்மிணி.




------------------------

அடுத்த கொங்கு அன்பர் Covai Ravee ங்க. இசையே மூச்சாக வாழும் அன்பர் கோவை இரவி. இவரின் வலைப்பூக்கள் தெய்வீக இராகம் SPB அவ்ர்களுக்காக படைக்கப்பட்ட வலைப்பூ. விநாய்கரோட் ஆபிஷேகம் அருமை.பாலாபிஷேகம் காணும் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்ன்னு நல்ல எண்ணத்தோட இருககாங்க. பணம் திரட்டி பொது சேவைகளும் செய்யறாங்க.




இவரோட வற்றாயிருப்பு சுந்தர் ரும் இந்த பூவுல எழுதுறாங்க.


எல்லா பாடகர்களுக்கும் வலைப்பூ வெச்சிருக்காங்க இரவி அண்ணன்


பாடும் நிலா பாலு பாட்டு கேக்க போங்க SPB சாரோட பாட்டுக்கள்.



இசைக்குயில் SJ இசைக்குயில் ஜானகியம்மா அவர்கள் வழங்கிய இனிய பாடல்கள் இந்த வலைப்பூவில கேட்கலாம் நீங்க.



இசையரசி இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள். சினிமாப்பாடல் வலைப்பூ தேன் கிண்ணத்துலயும் எழுதுறாறு ரவி சார்.




You rock ங்கற அந்த அனிமேஷன் பூணை அருமை.


__________________

இன்றைய தினம் முக்தி தரவல்ல மானசரோவர் ஏரியின் காட்சிகள் அதிகாலை சூரியன் ஒளியில் மற்றும் இராவணன் தவம் இராக்ஷஸ் தால் எனப்படும் இராவண ஏரியின் சில காட்சிகள்.



Sun's reflection in Holy Manasarovar





சூரிய கதிரை மனசரோவர் பிரதிபலிக்கும் அழகு



VIEW OF HOLY MANASAROVAR AT EARLY MORNING


காலை சூரிய ஒளியில் தங்கமென மின்னும் மானசரோவர்


மானசரோவர் தடாகம் பிரம்மா தனது மனதிலிருந்து உருவாக்கியது. இதன் கரையில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம். இதில் ஒரு முறை குளித்தால் முக்தி வழங்கவல்லது. சிவசக்திக்கு ஆகும் அபிஷேக நீரே மானசரோவர் தடாகத்தில் வந்து கலக்கின்றது. அம்மையின் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், வைணவர்கள் திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதும் மானசரோவரின் பல்வேறு அழகை கண்டு களிக்கின்றீர்கள்.








We get the first view of Kailash from Rakshas Tal only.





அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.





Labels:

இனிய Positive அந்தோணி முத்து

இது மற்றபதிவுகளைப் போல ஒரு அன்பரை அறிமுகப்படுத்தும் பதிவு அல்ல.

ஒரு உடற் குறையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட ஒரு வீர உள்ளத்துக்கு தலை வணங்கும் பதிவு.

அதே சமயம் அவருக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறும் பதிவு.

வலைப்பூ என்பது பொழுது போக்கு மட்டும் அல்ல பல நன்மைகள் செய்வதற்கும் உபயோகப்படும் எனபதை உணர்த்தும் பதிவு.


இனிய Positive அந்தோணி முத்து

எதையும் தெளிவாகக் கற்றுக்கொள்.
அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.

நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாப


என்று ஆரம்பிக்கும் அந்தோணி முத்துவின் வலைப்பூவிற்கு சென்று பார்பவர்கள் அவருடைய திட மனதை புரிந்து கொள்ளலாம் . வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் தோணியாகும் ஆசை இருந்தால் நீந்தி வா என்று அவர் விடும் அறைகூவல் நம்மை எல்லாம் உற்சாகப்படுத்துகிறது.


அவரின் கதையை அவரே கூறியுள்ளதை இங்கே படியுங்கள்.

The Real Anthony Muthu

Yeah..! I"ve got a Special boon from God. Physically Challenged.Percentage of Disability is 90 %(According to the doctor's certificate.)
Paralysed below my chest.

Oh... Thank you God for giving me 2 hands & an Independent Brain to work.
Residing at Chennai/Tamilnadu/India at the mercy of my elder sister.Below my chest there is no sense at all. I do not have the sense to pass Urine & Toilet. Someone has to press my Stomach to pass Urine. My Sister, has to dig out Toilet manually. She is a living God for me.
I got this disability at the age of 11. (In an accident)

Knowledge

My reading habit increased my knowledge. Developed a great interest in Electronics at the age of 15 & got 2 Diplomas in Radios & Audios respectively. (studied through correspondence) At the age of 20 the love for music from my boyhood flowered. Got an Electronic Musical Keyboard from a friend, & practiced on my own. Got basic lessons in music from
Rev.Fr. Paul Rajareegam and continued to study B.A degree (Indian music) through open university in Chennai University.

I N V E N T I O N S

In 1998 I Invented a new sound system by Combining Music fundamentality & Electronics(similar & advanced than Dts).
You can feel music Dancing around you according to the Composing in my sound system.

My Failures

I left no stone unturned and left no doors unknocked to popularize & to utilize my idea to the Film Industry.I cried for recognition.....No one recogonized me.Each and every moment of life chased me to the extreme end of my life.In one of those dark days with a black mood due to frustration and anger I smashed my Sound system, into pieces.

Regaining Confidence

Later I learnt to smile through the most difficult situations, and negotiate persistently for my point of view, taking risks in the process, in the most difficult of circumstances.

Computers

In 2005 my Friend Miss.Gomathi gifted me an old Computer & I practiced with it for atleast 18 hrs every day.Now I can say that I am a little bit Computer savvy.

Internet

In 2007 Novermber, I got internet connection, & my life took a sudden turn with beautiful bends.... The world with a path leading to heaven with beds of roses!!!

Blog Writing

I began to write a blog in Tamil, and the whole Tamil world turned its attention towards me. I even started my own English blog too.

Future Plans

I'm not sure what God wants me to do with all of this, but the strange thing is, I feel less tension with good hearted people around me always..

I have a greater sense of equilibrium about me now.Sometimes I have days when a black mood takes over and I just donot know how to shift from it, whatever the weather, rain or shine.If my mind is made up that I'm going to have a negative thinking day, then nothing can stop it, not even the brightest sunshine outside.
But I don't let my disability define me.....
And that keeps me alive....with lots of...hope...courage...confidence....and trust on me!!!!

What the future will bring? Who knows?


அன்பர்கள் பலர் சேர்ந்து அவருக்கு சக்கர நாற்காலி வழங்கிய பின் அவர் எழுதியுள்ள கவிதை

எனக்குக்
கால்கள் முளைத்தன....
சக்கரமென்னும்
விரல்களுடன்.....

தெரிந்த பத்து முகங்கள்
தவிர பலப்பல
முகங்களின்
தரிசனம்......
தினமும்......

எனக்கே எனக்கான
வெயிலுடன்
மழையுடன்
காற்றுடன்,
பூக்களுடன்..,
செடி, கொடி... மரங்களுடனும்...
என்னை நானே
அறிமுகப் படுத்திக்
கொண்டேன்.....

இருபத்தைந்து
வருடங்களுக்குப் பிறகு
வண்ணத்துப் பூச்சியுடன்
சினேகம்.......

ஓ.....வாழ்க்கை
இவ்வளவு அழகானதா?

இப்புதிய சக்கரங்கள்
கற்பித்த அற்புதங்களை
அனுபவிக்க வித்திட்ட
அத்தனை
அன்புள்ளங்களையும்

கண்ணீர்ப் பளபளக்கும்...
விழிகளுடன்...
பெருமை பொங்க... நோக்கி...

எவரெஸ்ட் உச்சி மீதேறி நின்று.....
"நான் சந்தோஷமா இருக்கேன்"
எனக்கூவ ஆவல்.........

சொற்களைத் தேடியலைந்து
தோற்றுப் போயின
என் உணர்வுகள்.....

வெறும் நன்றி
சொல்லித் தப்பிக்கப்
போவதில்லை.....

கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்........

ஒரே நாளில்
பதினோரு வயதுக்
குழந்தையாய் மறுபடி பிறந்தேன்.....

மீண்டும் வாழ்கிறேன்
பதினோரு வயதிலிருந்து ஆரம்பித்து.........

ஆம்...

நான் நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.

இல்லையில்லை..!

சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியிருக்கிறேன்...!

அவரது வலைப்பூ அந்தோணி முத்து

இவ்வாறு அவர் எழுதுவதற்கு ஒரு சக்கர நாற்காலி வாங்கித் தந்த அனைவருக்கும் கோடி கோடி நன்றி. அன்பரே துன்பம் வரும் போது யாரும் துவண்டு விடத்தேவையில்லை, தன்னம்பிகை மட்டும் போதும் வானமும் வசப்படும், இறைவன் ஒரு கதவை மூடினால நிச்சயமாக மறு கதவை திறந்து வைத்துள்ளான் எனபதை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கும் நன்றிகள்.
----------------------------------------------------------------
பல பேர் ஏன் இவ்வாறு சிலர் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கலாம், கடவுளே உனககு கருணை கிடையாதா என்று வசை பாடலாம். ஆனால் அவனின் கணக்கில் எல்லாவற்றிக்கும் ஒரு விளக்கம் உண்டு.

எனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி, எனக்கொரு மகன் பிறந்தான் என்று மகிழ்ந்தோம், இரண்டாவதாக என் மகன் பிறந்தவுடன், எல்ல்லோரையும் போல் வளர்ந்தான், ஓடினான் , பாடினான்,பள்ளியில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றான், அப்பனிடம் கதைகள் கேட்டான், மாணிக்கவாசகருக்காக ஐயன் பிரம்படி பட்ட கதை அவனுக்கு ரொம்பப்பிடிக்கும்.

திடீரென்று ஒரு நாள் பள்ளியில் ஆசிரியை என் மனைவியிடம் கூறினார்கள், ரவி டிபன் பாக்ஸை திறக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான் என்னவென்று பாருங்கள் என்று, டாக்டர்களிடம் ஒடினோம், மூளையில் சிறிய இரத்தக்கட்டி இடதுகரம் செயலிழக்க துவங்கிவிட்டது , கல்லீரலும், மண்ணீரலும் வீங்கியுள்ளது பார்க்கலாம் என்று கூறினார்கள் நான்கு வருடங்கள் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அலைந்ததுதான் மிச்சம். ஒன்றும் பலன் இல்லை முடிவில் மூளையின் செல்கள் தானாக மடிகின்றன ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டனர்.

முதலில் இடது கை மடங்கியது, பின் இடது கால் என்று ஒவ்வொரு அவயவமாக முடங்கி இறுதியில் படுக்கையில் முடக்கியது ஏதோ ஊட்டுவாள் என் மனைவி, அதுவும் நெஞ்சுக்குள் சென்று Infection ஆகும், அதற்கும் மருந்து கொடுத்து பார்த்துக் கொண்டோம். ஒரு நாள் இறைவன் நீ பட்டது போதும் என்னிடமே வா என்று அழைத்துக் கொண்டான்.

எதற்காக இந்தக்கதை என்று யோசிக்கிறீர்களா? இவ்வாறு அவன் துன்பப்பட்ட போது பலர் கேட்ட கேள்வி இது. ஏன் இது போல துன்பப்பட வேண்டும், ஏன்? ஏன் ? இந்த் சிறு வயதிலேயே இவ்வளவு துன்பம் ஏன்? எவ்வளவு பணம் இருந்தாலும் ( எங்கள் கம்பெனியில் மருத்துவம் இலவசம், எங்கு வேண்டுமென்றாலும் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் இலவசமாக. இந்தியா முழுக்க சுற்றினேன், டெல்லி AIIMS. பெங்களூர் NIMHANS என்று ) ஆனாலும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பது எவ்வளவு பொய் என்பதை இறைவன் அடியேனுக்கு உணர்த்தினான் .

அப்போதுதான் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது ஒரு தெளிவும் தோன்றியது நாம் ஆணவத்தால் என்னதான் செய்ய நினைத்தாலும் அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. எல்லாம் அவன் செயலே.
எனவே அவனிடம் பூரண சரணாகதி ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்பது விளங்கியது.

இனி அந்த கேள்விக்கான விடை பூர்வ புண்ணிய பாவம், நாம் இருக்கும் நிலை நம்மைத்தொடர்ந்து வரும் இருவிணையின் பயன். யாருக்கு மோட்சம் நெருங்குகின்றதோ அவர்க்ள் இந்த கர்ம பூமியில் அதிக நாள் தங்குவதில்லை. இருக்கின்ற கர்மாவை சீக்கிரம் தொலைத்து விட்டு எம்பெருமானுக்கு சேவை செய்யப் போய் விடுகின்றனர். பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளும் இவ்வாறு தான் இருக்கின்றன சிறு கர்மாவை ஒழிக்க அது ஜன்மம் எடுக்கின்றது. Spastics வகைக் குழந்தைகளும் இவ்வாறுதான். அவர்கள் யாருக்கும் துன்பம் செய்ய முடியாது, அவர்களுக்கு யாரும் துன்பம் விளைவிக்கவும் முடியாது. இவவாறு பிறந்தவர்களுக்கு சேவை செய்பவர்களும் கொடுத்து வைத்தவர்களே. அவர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள், முக்தியை நெருங்கி விட்ட ஆத்மாக்கள்.

ஆகவேதான் அன்பர்களே ஆன்மீகப்பதிவுகள் மட்டுமே எழுதி வருகிறேன் அவன் புகழ் பாடுதல் ஒன்று மட்டுமே பேரின்பம், நிலையானது, குறைவில்லாதது, அழியாதது, அள்ள அள்ளக் குறையாதது, மற்ற ஐம்புலன்களால் நாம் உணரும் இன்பங்கள் எல்லாம் சிற்றின்பங்களே.
இது அடியேன் சொலவதல்ல, நம் முன்னோர்கள் சொல்லிய்வைதான் இதை உணரத்தான் இறைவன் இப்பிறவியை அளித்தானோ என்னவா. இலுப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பை வராமற் கா என்பதே அந்த இறைவனிடம் பிரார்த்தனை.

அந்தோணி முத்து போன்றவர்கள் இறைவனின் அன்பர்கள் அவர் போன்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் இறைவனுக்கு பிரியானமானவர்கள் எனப்தால் உங்கள் அனைவருக்கும் தலை வணங்கி இப்பதிவை நிறைவு செய்கின்றேன்.
----------------------------------------------------------------------

Labels:

அடியேனையும் இரசிக்கும் சில அன்பர்கள்

எந்த கலைஞனுக்கும் கைதட்டல் எவ்வாறு உற்சாகத்தைத் தருமோ அது போல வலைப்பூவில் பின்னூட்டங்கள் வ்லைப்பின்னலர்களுக்கு உற்சாகத்தை தருகின்றன. இவ்வாறு அடியேனுக்கு ஆதி காலத்திலிருந்து ஊக்கம் அளித்து வரும் சில அன்பு உள்ளங்களின் வலைப்பூக்கள் இப்பதிவில். ஏனென்றால் அடியேனின் வலைப்ப்பூக்களை படிப்பவர்கள் மிகக்குறைவு.

முதலில் நாம் பார்க்கப்போகும் அன்பர் வடுவூர் குமார் கட்டுமானத்துறை நிகழ்வுகளை பற்றிய பதிவிடற இவர், அவ்வப்போது கொஞ்சம் வெளி விஷயங்களைப்பற்றியும் எழுதுகின்றார்.



"இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!" ஒரு அரிய உண்மையும் கூறும் இவர், தன்னுடைய பழைய இடுகைகளுக்கு இட்டுள்ள பெயர் கள்ளிப்பெட்டி, இவரை மயக்கும் பாடல்களையும், பிடிக்கும் பாடல்களையும் தருகின்றார் இவர் கட்டுமானத்துறை என்ற அவரோட வலைப்பூவில்.




கத்திப்பராவில் கட்டிய புதுமேம்பாலத்தில் Shoulderகள் இல்லை என்றும். வாகன போலீஸ்காரர்களூக்கு முகக்கவசம் கொடுக்கவேண்டும்.அரசாங்கம் மூலம் நடக்கவேண்டும் என்றால் இவர்களை சென்றடைய இன்னும் பல காலங்கள் அதற்குள் அவர்கள் நலம் இன்னும் மோசமாகக்கூடும்.அதனால் செலவு குறைவாகக்கூடிய இந்த நற்பணியை தமிழ் வலைப்பதிவர்கள் ஏன் மேற்கொள்ளக்கூடாது? கேட்பதிலிருந்து இவரது நல்ல உள்ளம் உங்களுக்கு புரிந்திருக்கும்.



மேலும் இவர் லினக்ஸ் என்று வலைப்பூவில் லினக்ஸ் கற்றுத்தருகின்றார்.


--------------------------------------------------------------------


அடுத்த அன்பர் ச்சின்னப்பையன் சார். இவரை இவர்கள் தங்கமணி தண்ணி தெளிச்சுவிட்டா போறாதுண்ணு குடத்தையை அப்படியே கவுத்துட்டதால் வலைச் சரத்தையே தன்னுடைய நகைச்சுவையா கலக்கிட்டு இருக்கறரு.



2020ல் இவர் தான் தமிழக முதல்வருன்னு நம்பிக்கையோட இருக்கறவங்களை இவரோட வலைப்பதிவுக்கு வரலாம்னு கூப்புடறாருங்க. இவரின் காமெடிகளை இரசிக்க க்ளிக்குங்கள் ச்சின்னப் பையன் பார்வையில் .


தற்போது இவர் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
வலைப்பூவின் அட்லாஸ் சிங்கம். இவ்வாறு உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபப்பசங்கள்ன்னு தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்



























நேரம் கிடைக்கும் போது சென்று படியுங்கள் ச்சின்னப்பையன் வலைப்பூவை வாய் விட்டு சிரித்து உங்கள் நோய் விட்டுபோகும். அப்படியே பொழுது போக்கவேணும்ன்னா வாலிபபப்சங்க வலைப்பூபக்கம் போங்க அவங்க அடிக்கற லூட்டியில உங்க மனம் லேசாயிடும்.
------------------------------------------------------------
மூன்றாவது அன்பரும் மிகவும் நகைச்சுவையாக எழுதுபவர்தான். இவர் மட்டுமல்ல இவரது அன்பு மகளும் அதாவது அபி பாப்பாவும் தாய் ( இங்கு தந்தை) எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று நிரூபித்தவள். இவரது வலைப்பூ அபி அப்பா
இவர் மற்றவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் தள்ம் எது தெரியுமா? அன்பர்களே



வேடந்தாங்கல்.......
பறவைகள் சரணாலயம் அல்ல இது கும்முபவர்களின் சரணாலயம். அன்பின் பிறப்பிடம்;நட்பின் உறைவிடம்;சந்தோஷ சரணாலயம் வேடந்தாங்கல்.

நாங்கதேன்னு இவருடன் சேர்ந்து கும்முபவர்கள் இவங்கதேங்க

ஆயில்யன்

பொன்வண்டு

கண்மணி

காயத்ரி

முத்துலெட்சுமி-கயல்விழி

கோபிநாத்

மின்னுது மின்னல்

.:: மை ஃபிரண்ட் :

:. குட்டிபிசாசு

இளைய கவி

தருமி

சுரேகா..

அய்யனார்

குசும்பன்



அபி அப்பாவின் நூலகம் ஒரு அருமையான தகவல் பெட்டகம் என்றால் அது மிகையாகாது. இவ்வ்லைப்பூவில் கர்நாடக சங்கீதம், பின்னவீனத்துவம், பெண்களின் பிரச்னைகளூக்கான தீர்வு, அவர் ஊரான மயிலாடுதுறை மற்றும் மரக்காணம் பாலவின் பதிவுகள் உள்ளன.



ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - என்று ரமணர் காட்டிய பாதையில் நடக்கும் அபி அப்பாவிற்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------


10 வருடங்களாக செளதி அரேபியாவில் பணி புரிகிறேன். பிடித்தது ‍‍- தமிழ், பிடிக்காதது - பொய் பேசுவது, கற்றது பிழைப்பு நடத்துமளவுக்கு மின் பொறியியல், கல்லாதது - உலகளவு, கேட்க விரும்புவது இனிய இசை, கேட்க விரும்பாதது - புறம் பேசுவது, மற்றபடி என்னை பற்றி கூற என்ன இருக்கிறது? அப்படின்னு தன்னை அறிமுகம் செய்து கொள்கின்ற expat Guru ஐயாதான் நம்மோட அடுத்த அன்பர் Madras Thamizhan என்று வலைப்பூவின் பெயர் வைத்துக்கொண்டு உலக்ம் சுற்றும் Expat Guru ஐயா அவர்கள். பல இடங்களில் இவர் பட்ட கஷ்டங்களைக்கூட மிகவும் நகைச்சுவையாக எழுதுகின்றார் இவர். நல்லதை நினைப்போம், நல்லதே செய்வோம்! என்ற கொள்கையுடன் வலம் வரும் இவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் ஐயா தன்னுடைய இயற்பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
---------------------------------------------------

அடுத்த அன்பர் கோவி கண்ணன் அவர்கள். காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்) -உலகத்து உண்மைகளை உரக்கச் சொல்லுவது அறிவியல் ... உணர்ந்து சொல்லுவது கவிதைகள் ...! என்று இவரது இவ்வலைப்பூ முழுவதும் அருமையான கவிதைகள். எத்தனை எத்தனை எண்ணங்கள் நெஞ்சினிலே.... வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!நேரமில்லை என்றால், தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே! என்று இவர் கூறும் விதம் அருமை. இவரது இரண்டாவது வலைப்பூ காலம் எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
----------------------------------------------------





அடுத்த அன்பர் பாஸ்டன் பாலா ஐயா அவர்கள் பீட்டர்ஸ் என்னும் வலைப்பூவில் ஆங்கிலம் பேசுவது எழுதுவது குறித்தான உதவிப் பதிவு.








உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். என்று அன்பர்க்ளைன் பல சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றார். உலகும் முழுதும் உள்ள விளம்பரங்களை தொகுத்து India, NRI, Tamil, USA, World News








பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா? என்ற கேள்வியில் பாட்ஸ்டன் பாலா ஐயாவின் எழுத்து வன்மை புரியும்.




மற்ற அன்பர்களைப்பற்றி முன்னர் எழுதிய பதிவுகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் விடுபட்ட அன்பர்களின் வலைப்பூக்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. மேலும் சில சமயம் வந்து பார்த்து விட்து பின்னூட்டம் இடாமலும், ஏதோ ஒரு தடவை பின்னூட்டமிட்டும் சென்ற அன்பு உள்ள்ங்கள் கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வரும் கால்த்திலும் வந்து தரிசன்ம் பெறுங்கள்.
---------------------------------


View of west and North faces - மேற்கு முக மற்றும் வடக்கு முக தரிசனம்



















North face on way to Dolma Pass- we can clearly see the extension of the east face.






டோல்மா கணவாய் செல்லு வழியில் கைலாய தரிசனம். சிவலிங்கத்தின் தாரா போல விளங்கும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை தெளிவாக காணலாம்.









இன்றைய தினம் மரகதவல்லி மீனாக்ஷி அம்மன் மலைமகள் கௌரி நீராடும் கௌரி குளத்தின் தரிசனம் காணுங்கள் அன்பர்களே. அன்னையின் கர்ப்பகிரகம் டோலமா கணவாய் மற்றும் கௌரி குளம் இயற்கையாகவே அம்மனுக்கு உரிய இடப்பக்கத்தில் அமைந்துள்ளது.













Gauri Kund in June.


























Gauri Kund





Gauri Kund is located just below Dolma Pass. It is supposed to be the pond in which Mother Parvati takes bath. It is really wonderful that the pond is emerald green reflecting the color of Mother. where as the water is crystal clear. The water of Gauri Kund is supposed to have cancer curing properties.




Labels: