திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Saturday, September 6, 2008

அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-1

நவீன நாரதர் KRS


சி அ : என்னப்பா இந்த பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் பத்தித்தானே?.

சந்தேகம் என்ன ஆன்மீகம் தான் அதுலயும் அனைவரும் பார்த்து வியக்கும் சில பதிவர்களை அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்.

பெ. அ : அதான் அவங்களைப் பாத்து எல்லாரும் மூக்கில விரல வைக்கிறாங்கன்னு சொல்றேங்களே பின்ன அவங்களுக்கு எதுக்கு அறிமுகம்.

நீ சொல்றது கரெக்ட்தான் , அவங்க எல்லாம் குன்றின்மேல் இட்ட விளக்குகள், அதனாலதான் அனைவரும் பார்த்து வியக்கும்ன்னு தலைப்பு கொடுத்திருக்கேன்.

சி. அ : சரிப்பா, யாரை மொதல்ல சொல்ல போறீங்க?

இவரை சிலர் பதிமூன்றாம் ஆழ்வாருன்னு கூப்பிடறாங்க, சிலர் விஷ்ணுங்கறாங்க, ஒருத்தர் கண்ணாங்கறாங்க, வேறொருத்தர் வைணவ வாரியாருங்கறாங்க, சன்மத காவலர்ங்கறாங்க, மறு பக்கம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல இவரை இளையனாருன்னு புகழ்றாங்க, துளசி டீச்சர் ***-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்ன்னு தலைப்பு போட்டுட்டு இவரை புகழறாங்க.

பெ.அ : எனக்கு புரிஞ்சு போச்சு, தமிழ் இவர் கையில் மட்டும் எப்படி இப்படி வளையுதுன்னு நானும் ரொம்பத்தடவை ஆச்சரியப்பட்டிருக்கேன். சேந்தானார் சரிதத்தை எவ்வளவு அருமையா தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை? ன்னுட்டுகொடுத்தாரு.


சி. அ : அம்மா எனக்கும் அவர் யாருன்னு தெரிஞ்சு போச்சு , அவரோட பதிவுகள் எல்லாத்துலையும் குறைஞ்சது நூறு பின்னூட்டங்களாவது இருக்கும், இத்தனைக்கும் பொறுமையா, அருமையா எப்படி பதில் தரார்ன்னு நானும் ஆச்சிரியப்பட்டிருக்கிறேன்.

இவ்வளவு கூறிய பின்னுமா அன்பர்களே தெரியவில்லை அவர் தான் The Great kannabiran, RAVI SHANKAR (KRS). ஆன்மீகமும் காதலும் எனது இரு கண்கள் என்று கூறும் இவர் ஒரு சகல கலா வல்லவ்ன், எழுதுகின்றார், பாடுகின்றார், வரைகின்றார் எல்லாவற்றிலும் இவர் வல்லவர். கண்ணன் பாட்டு, முருகனருள், சிவன் பாட்டு, அம்மன் பாட்டு எல்லாத்திலயும் இவரின் பங்கு உண்டு.

சி. அ : அப்பா இவர் எழுதின சுப்ரபாத பதிவு நெசமாவே சூப்பர்ப்பா,

இன்ன்னொரு பதிவு சிவலிங்கம் ச்சே "அதை"யா குறிக்கிறது? சூப்பரோ சூப்பர்.

இவர், குமரன், சைலஜா, கவிநயா எல்லாம் ஒன்னா சேர்ந்து பல அருமையான பதிவுகள் தர்றாங்க.

மாதவிப்பந்தல் ஒரு பிரம்மகமலம் என்பதில் ஐயமில்லை
.
மூவரும் கோரஸாக KRS ஐயா! தாங்கள் வாழ்க பல்லாண்டு! வளர்க தங்கள் தொண்டு!.எல்லோரும் உங்களுக்கு பட்டம் தந்திருக்கறாங்க நாங்களும் உங்களுக்கு நவீன நாரதருன்னு பட்டம் தர்றோம்.
-------------------------------------------------------------------------------------
பெ. அ : அடுத்தது குமரன் சாரை பற்றி சொல்லலாங்களா?




நீ சொன்னா அதுக்கு நான் மறுப்பு சொல்ல முடியுமா? அப்பிடியே செய்துறலாம்.



சி. அ : இதுக்கு முதல்ல எழுதின பதிவுல அபிராமி அந்தாதிக்கு விளக்கம் எழுதின கூடல் மாநகர அஙகிள்ன்னு சொன்னீங்களே அவராப்பா?.



பெ அ : ம்ம்ம்ம் இருங்க இருங்க , இவருதானே புல்லாகிப் பூண்டாகி நினைத்ததும் நடந்ததும் ன்னு அருமையான தொடர் கதை எழுதினாரு?.



சரியா சொன்னமா, ஆன்மீகமும் இலக்கியமும் இவரது இரண்டு கண்கள்.

அடியேன் சிறிய ஞானத்தன் என்று அடக்கமாக சொல்லிக் கொள்ளும் இவர் எழுவதோ பெரிய ஞானங்களைப் பற்றித்தான்.

ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்க்கும் பொருள் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிருக்காரு.



பெ.அ : இவரும் கண்ணன் பாட்டு, சிவன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள் அத்தனையிலும் கலந்து கொள்றாரே.



இவர் திருப்பாவைக்கு ஒரு வலைப்பூவும் எழுதியுள்ளார்.



இரண்டாவது தடவை தமிழ் மணத்தின் நட்சத்திர பதிவாளர் ஆன வெகு சிலருல இவரும் ஒருத்தருங்களிருந்தே இவரோட எழுத்து வன்மை அனைவருக்கும் புரிஞ்சிருக்குமே.

மூணு பேரும் சேர்ந்து இவரையும், தங்கள் சேவை மேலும் சிறக்கன்னு வாழ்த்துகிறோம்.
------------------------------------------------------------------------------------
சி அ : இப்ப ஒரு தலைவியைப் பத்தி சொல்லலாமா அப்பா?
எந்தத் தலைவிம்மா?


பெ அ: வலைத்தலைவிதான் அதாவது வலை அன்பர்கள் அன்போட தலைவின்னு கூப்பிடற கீதா சாம்பசிவம் அம்மாவைப்பத்தித்தான்.


இவங்களோட காலடி சுவட்டிலே அப்படியே அடியேன் எழுதுறேன்னோன்னு சில சமயம் சந்தேகம் வரும். இவங்க முதல்ல ஆன்மீகப் பயணம் பதிவு திருக்கயிலாய யாத்திரை பற்றி இவருதான் எழுதினார் அதுவும் , மிகவும் அருமையாக எழுதியிருக்கிறாங்க இவங்க.


பெ. அ : இவங்க நேபாளத்தின் வழியாக போனாங்க நீங்க இந்தியா வழியாக போனீங்க அல்லவா ?


அதேதான் அதனால ரெண்டு பேரு பதிவுகளிலும் நிறைய மாறுதல்கள் உள்ளன அதனால இஷ்டப்பட்டவங்க வந்து தாராளமா படிக்கலாம் முதல்ல படிச்சதையே மறுபடியும் படிப்போமோன்னு பயம் வேண்டாம்.


சி. அ : யாத்திரையை விட்டு நீங்க மறுபடியும் அவங்க எழுதற நடராஜரைப் பற்றியும் எழுதுறீங்க இல்லப்பா? (மனசுக்குள்ள ... ஈயடிச்சான் காப்பி)
ஆமாம்மா, ஆனா அவங்க அளவுக்கு ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுத நிச்சயமா நம்மாள முடியாதும்மா. அவ்வளவு ஆத்மார்த்தமா எழுதறாங்க அவங்க, simply superb.


பெ. அ : இதை தவிர இவங்க எண்ணங்கள் என்னும் வலைப்பூவிலே "கதை கதையாம் காரணமாம்னு" இராமாயண கதையை சூப்பரா சொல்லிட்டு வராங்க.


சி .அ : அந்த பதிவுல ஆடிப் பூரத்த்தன்னிக்கு "திருவாடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியேன்னு" , ஆண்டாள் பற்றியும் அவங்களோட திருப்பாவையைப் பற்றியும் ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்காங்களே அதைப் படிச்சீங்களாப்பா?


படிக்காம இருப்பனா? படிச்சிட்டேனே, திருப்பாவை , நாச்சியார் திருமொழி இரண்டையும் அற்புதமா எடுத்து எழுதியிருக்காங்க.


சி. அ : இப்ப கணபதிராயன் அவனிரு காலைப் பிடிப்போம்னுட்டு விநாயகரைப் பத்தியும் எழுதிட்டு வராங்க இல்லப்பா?


பெ. அ : இவங்களும் மதுரைக்காரங்களா?
அட! எப்படி கரெக்டா சொல்ற? சரி


மூவரும் : அவருக்கும் வாழ்த்து சொல்லுவோமா? அருமையான தொண்டு செய்யும் கீதாம்மா, வளர்க தங்கள் தொண்டு.
-----------------------------------------------


நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?


சி. அ : என்னப்பா திடீர்ன்னு பாட ஆரம்பிச்சிட்டீங்க, வலைச்சரத்துல பதிவு எழுதறதை விட்டுட்டு, எதாவது நட்டு கிட்டு கழண்டிடுச்சா?


அப்படித்தான்னு வெச்சுக்கோவே இவங்க கவிதையைப் படிக்கறவங்க எல்லாம் இப்படித்தான் ஆயிடறாங்க.


பெ.அ : யாருங்க அவங்க.



கண்ணனுக்குத் தந்த உள்ளம் அப்படின்னு ஒரு அருமையான தொடர் கதையும் எழுதியிருகங்க இப்ப சொல்லு அவங்க யாருன்னு.


பெ. அ : யாருன்னு இன்னும் தெரியல்லையே.


சி. அ : மம்மி ட்யூப் லைட் , இது கூடவா தெரியல்லை, கவிநயா அவங்களை சொல்றாரு அப்பா.


பெ. அ: "நினைவின் விளிம்பில்..." உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்... அருமையான கவிதைகளை எழுதுறாங்க.


" நினைச்சுட்டீங்க! அதை சொல்லீடுங்க :) ன்னு அவர் பின்னூட்டம் இடச்சொல்லும் பாணி சூப்பர்.


சி. அ : இப்பத்தான் அவங்க 50வது பதிவு போட்டு தங்க விழா கொண்டாடியிருக்காங்க,


அவங்களுக்கும் ஒரு ஓ! போடலாம். இன்னும் பல கவிதைகள் எழுதி நல்ல மணம் பரப்பு வேண்டுகின்றோம் கவிநயா.
------------------------------------------------------------------
இன்று தியாகராஜரின் அகோர முகம் எனப்படும் தெற்கு முக தரிச்னம் பெற்று இன்புறுங்கள் அன்பர்களே.








Nandi facing the Lord - எம்பெருமானுக்கு எதிரே மலை வடிவில் நந்தி


On the right side is Lord Ganesh - வலப் பக்கம் முழு முதற் கடவுள் கணேசர்

தெற்கு முகம் - அகோர முகம் : தக்ஷ’ணாமூர்த்தி ரூபம். இந்தியாவை நோக்கியுள்ள முகம். யாத்திரை செல்லும் போது முதலில் தரிசனம் தரும் முகம். திருமுக வதனம், முக்கண்கள், ஜடா முடி முதலியன தரிசனம் தரும் முகம். வலப்பக்கத்திலே கணேசரையும் எதிரே நந்தியெம்பெருமானையும் தரிசனம் தரும் முகம். யம துவாரத்திலிருந்தும் தரிசனம் செய்யும் முகம். மூன்று நாட்கள் தரிசனம் தரும் முகம். மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் தடாககங்களிடமிருந்தும் தரிசனம் செய்யும் முகம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home