திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Sunday, September 7, 2008

அனைவரும் பார்த்து வியக்கும் சில ஆன்மீகப்பூக்கள-3

இப்ப நாம பார்க்கப்போறவரு தமிழ்ச்சங்கத்தின் ஒரு ஆசிரியர் , தமிழால் இணைவோம்; தமிழைப் போற்றுவோம்ன்னு தமிழின் பெருமைகளை எடுத்து காட்டுபவர்.

பெ. அ : இவரு அம்மன் பாட்டுலயும், முருகனருளிலும் எழுதுறாரு.
ஆத்திகம் வலைப்பூவுல ஆன்மிகத்தைப் பற்றி எழுதுறாரு.

டண் டண் டண் ...... அவர் தான் VSK அவர்கள்

சி. அ : இந்த அங்கிளோட ஒரு ரொம்ப உபயோகமான வலைப்பூவைப் பத்தி சொல்லுங்கப்பா.அதுவும் ஒரு குழுப்பதிவு 12 அன்பர்களின் பங்களிப்பு இதில இருக்கு, வலைபூவோட பேரு விக்கி பசங்க .

இந்த வலைப்பூவின் கருத்து : தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்க. உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இவங்க கிட்ட கேட்டா உங்களுக்கு பதில் கிடைக்குதுங்க.

WIKI காலத்தில் விக்கி பசங்களின் சேவை அருமையாக உள்ளது.
VSK ஐயாவிற்கும் மற்றும் அனைத்து விக்கிகளுக்கும் நன்றிகள்.
___________________________________

சி . அ : அடுதத பதிவர் யாருப்பா?

ஒப்பிலி அப்பனுக்கு இராக மாளிகை கட்டியவர்தான் நம்மோட அடுத்த அன்பர்.

ஒப்பில்லாத அப்பன் நம் ஒப்பிலியப்பன்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பன் என் விண்ணகரப்பன் என்று
நம்மாழ்வார் துதித்த செல்லப்பன்


என்பது இவர் ஒப்பிலியபனுக்கு இவர் சமர்பித்த கவிதையின் ஒரு கண்ணி

.பெ அ : ஜீவி சார் தான் இந்த பதிவர் இல்லீங்க? .

ஆமா, ஆமா, பூ வனம் இவரோட நந்தவனம். எத்தனை எத்தனை எண்ணங்கள் நெஞ்சினிலே....

அவையெல்லாம் மலர்களாக பரிமளிக்கின்றன இந்த வலைப்பூவில்.

_________________________________________

அடுத்து நாம பார்க்கப் போற பதிவர் மிகவும் அன்பானவரு.

சி. அ : இப்பிடி ஈஸியா க்ளூ கொடுத்தா எப்படிப்ப, நீங்க அன்புடன் பாலா அங்கிளைத்தான சொல்றீங்க.நீயும் நல்லா தேறீட்டயே அவரேதான்.

பெ. அ:
தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா ஐயா எழுதும் வலைப்பூ.

சி. அ : ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் - இது தான் இவரோட கொள்கை முழக்கம்.

இவரோட திருப்பாவை பதிவுகள்தான் எனக்கு முதல் அறிமுகம், அருமையான விளக்கங்களோட ஆழமா கருத்துக்களோடும் எழுதியிருக்காரு. பாசுரங்களுக்கான படங்களும் சூப்பர்.

சி. அ : மொத்தம் 453 பதிவுகள் ஏழுதியிருக்காரு இல்லப்பா.

அதுமட்டுமில்லம்மா தமிழ் மண நடசத்திரமாவும் இருந்திருகாரு பாலா சாரு.

பெ அ : காலம் பொன்னானது கடமை கண்ணானது ன்னுட்டு கடிகாரத்தை காண்பிக்கறாறு, பதிவுக் கிடங்கு - இவரோட பழைய பதிவுகள்,

நான் வாசிக்கும், என்னை(யும்) வாசிக்கும் வலைப்பதிவர்கள் ன்னு அனைத்து வலைப் பதிவர்களையும் அடையாளம் காட்டுறாரு.

ஐயா வளர்க தங்கள் தொண்டு.
-------------------------------------

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home